-ஒப்பிலியப்பன்
சில மாதங்களுக்கு முன்பு ‘தாய்மதம் திருப்புதல்’ (கர்வாபஸி) என்ற செய்தி டி.வி.யிலும் செய்தி ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். வன்முறையாலும், பணத்தாலும் கோடிக் கணக்கான ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டதும், இன்றும் செய்து கொண்டிருப்பதும் உண்மைதானே!
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வழிதவறி மதம் மாறியவர்களை, தாய்மதத்திற்கு தனது அன்பு வழியால் மாற்றிய தீரர்தான் மகான் ராமானுஜர்!
ஓர் உதாரணம்: விட்டலதேவன். ராமானுஜரால் ‘விஷ்ணுவர்தனன்’ ஆகி, திருநாராயணபுரத்தில் ‘யாதவாத்ரிபதி’ என்ற மூர்த்திக்கு ஆலயம் எழுப்பினார்!
சினமும் சீறும் தன்மையும் ஆதிசேஷனின் குணங்கள். இந்த ஆதிசேஷனின் அம்சமான பகவத் ஸ்ரீராமானுஜரோ, சாந்தமும் பொறுமையும் தாயையும் கொண்ட கருணாமூர்த்தி! எத்தனை முரண்பாடு!
இதனால்தானோ என்னவோ, இவரின் ஆன்மிகக் கருத்துக்களில் முரண்படுபவர்கள் கூட இம்முக்கோல் முனிவரின் திருநாமத்தைச் சொன்னால் முரண்படாமல் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர்! இவர் காலத்தை வென்ற காஷாயத் துறவி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக