-ஆசிரியர் குழு
வைணவப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:
2. தானுகந்த திருமேனி
தமர் உகந்த திருமேனி- இரண்டாம் திருமேனி (இராமானுஜர் சிலை) ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டது.
இராமானுஜர் தம் 120 -ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோயில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னிதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள்.
சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் ரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுஜர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாறிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள்.
அதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
பின்பு இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரது சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள்.
இராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்தது என்பதாகும்.
இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோயிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.
வைணவப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:
- தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
- தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
- தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).
2. தானுகந்த திருமேனி
(ஸ்ரீ பெரும்புதூர்)
தமர் உகந்த திருமேனி- இரண்டாம் திருமேனி (இராமானுஜர் சிலை) ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டது.
இராமானுஜர் தம் 120 -ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோயில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னிதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள்.
சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் ரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுஜர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாறிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள்.
அதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
பின்பு இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரது சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள்.
இராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்தது என்பதாகும்.
இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோயிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.
நன்றி: விக்கிபீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக